நன்றி கடவுளே!!! 5 வார கால சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ்...! போப் பிரான்சிஸ் உடல் விவரம் பற்றி தெரியனுமா? - Seithipunal
Seithipunal


உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி திருத்தந்தை எனப்படும் போப் ஆண்டவர் பிரான்சிஸ்,  இத்தாலியிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்டு அதைத்தொடர்ந்து நடந்த பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இதில் சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார்.

அதன்பிறகு தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் அபாய கட்டத்தை தாண்டி இருந்தார்.கடந்த 6-ந்தேதி போப் பிரான்சிஸ் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதன்பின் 16-ந்தேதி அவரது புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மேலும் 5 வார கால சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் ஆனார்.

இதில் 38 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து திரும்பிய போப் பிரான்சிஸ், வாடிகனிலுள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறு போப் மக்களை சந்தித்து பேசினார்.இவரைக்கண்டதும் மக்கள் மகிழ்ச்சியில் கோஷமிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Discharged after 5 weeks treatment Want know about Pope Francis physical condition


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->