உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து - சுற்றுலா பயணிகள் கவலை.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் உள்ளது. இந்த டவர் பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், ஈபிள் டவரில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, ஈபிள் டவரில் உள்ள முதல் தளத்திற்கும் 2வது தளத்திற்கும் இடையே லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்து இருந்த 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், ஈபிள் டவர் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடையம் விதிthதுள்ளனர்.

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈபிள் டவரில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் குவிந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கவலையடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fire accidetn in france eiffel tower


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->