இலங்கை அரசுக்கு எதிராக தொடரும் போராட்டங்கள்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்.! - Seithipunal
Seithipunal


இலங்கை அரசுக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எரி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அவற்றின் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை கண்டித்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டுமென தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

இதனால் மாணவர்கள் மீதும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் அவர்களை விரட்டினர். இதைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக அடுத்த கட்டமாக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police attack on protesting students


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->