நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு; 2 நீதிபதிகள் பலி! - Seithipunal
Seithipunal


ஈரான் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 நீதிபதிகள் உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. இந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக முகமது மொஹிசா, அலி ரசானி செயல்பட்டு வந்த இரு நீதிபதிகளும் இன்று சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள ஓய்வெடுக்கும் அறையில் இருந்ததாக கூறப்படுகிறது .

இந்தநிலையில் அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் நீதிபதிகளை குறிவைத்து கண்மூடித்தனமாக சுட்டதில்  நீதிபதிகள் மொஹிசா, அலி ரசானி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் நீதிபதிகளின் பாதுகாவலரும் படுகாயமடைந்தார்.

இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தீவிர அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவர்கள் என்பதும், சமூக ஆர்வலர்கள், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை கொடுப்பவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஈரான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shooting at court premisesTwo judges killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->