பாகிஸ்தான் :: காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 4 போலீசார் பலி
Terrorist Attack On Pakistan Police Station Kills 4 police
பாகிஸ்தானில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு போலீசார் உயிரிழந்துள்ளனர்.
ஆசிய நாடான பாகிஸ்தானின் கைபர் பக்ட்டுங்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள தெற்கு வாரிஸ்தான் மாவட்டத்தின், லாகி மர்வத் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக பயங்கரவாதிகள் காவல் நிலையம் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ராக்கெட் லாஞ்சர்கள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த தாக்குதலில் நான்கு காவலர்கள் உயிரிழந்ததாகவும், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த வித பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்காத நிலையில், தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற பயங்கரவாதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரீப் அல்வி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
English Summary
Terrorist Attack On Pakistan Police Station Kills 4 police