நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள் - 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்றபோது மற்றொரு விமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் இரண்டு விமானங்களும் மக்காதூர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் நொறுங்கி விழுந்து தீப்பிடித்ததால் அங்கிருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் விமானிகள் உள்பட 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 

இந்த விபத்துக் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுவானில் இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died flight accident in austrelia


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->