உலக நாடுகள் சோகம்!...ஆற்றில் படகு கவிழ்ந்த கோர விபத்தில் 100 பேர் பலி!
Tragedy of the world 100 people died in a tragic accident in which a boat overturned in the river
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா நாட்டில் உள்ள நைஜர் மாகாணத்தில் நைஜர் என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் நேற்று சென்ற படகு ஒன்றில் சுமார் 300 பேர் பயணித்ததாக சொல்லப்படுகிறது. முன்னதாக இஸ்லாமிய மத விழாவில் பங்கேற்றுவிட்டு , பின்னர் அனைவரும் படகில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.
தொடர்ந்து மொக்வா என்ற பகுதியில் இரவு 8 மணியளவில் இந்த படகு சென்றபோது படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து ஆற்றுப் பகுதிக்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் மூழ்கி பரிதவித்த 150 பேரை உயிருடன் மீட்டனர். இருந்த போதிலும், இந்த விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கான காரணம் வெளியாகவில்லை.
English Summary
Tragedy of the world 100 people died in a tragic accident in which a boat overturned in the river