கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தும் அணுகுண்டை போரில் பயன்படுத்த உக்ரைன் திட்டமா? பீதியை கிளப்பும் ரஷ்யா! - Seithipunal
Seithipunal


கடந்த 8 மாதங்களாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், முதல் கட்டத்தில் உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன. இரண்டாம் கட்ட தாக்குதலை தொடர்ந்துள்ள ரஷ்யப்படைகள், உக்ரைன் கெர்சன் மாகாணத்தில் உள்ள பிரம்மாண்ட நோவா அணையை தகர்க்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

மேலும், கெர்சன் மாகாணத்தில் தாக்குதல் தீவிரமடைவதை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்களை வெளியேறுமாறு ரஷ்ய ஆதரவு ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இந்நிலையில், ரஷ்யா மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்கள் உக்ரைன் விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அப்போது, கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தும் அணுகுண்டை போரில் உக்ரைன் பயன்படுத்தும் என ரஷ்யா  கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரிட்டன் தரப்பு மறுத்துள்ளது. மேலும், உக்ரைனும் இதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவிக்கையில், ஐரோப்பா கண்டத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய திறன் ரஷியாவுக்கு மட்டுமே உள்ளது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine Russia War oct 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->