இலங்கையின் புதிய அதிபர் யார்?...தொடங்கியது வாக்கு எண்ணும் பணி! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது.

தொடர்ந்து  இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதன் காரணமாக  இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு அடைந்தவுடன் தற்போது அங்கு வாக்கு என்னும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி நிலவுகிறது.

மேலும் இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நாளை தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who is the new president of Sri Lanka vote counting has begun


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->