கணவன் நடத்தையில் சந்தேகம், ஆணுறுப்பில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி, ராணிபேட்டை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


கணவனின்  நடத்தையில் சந்தேகமடைந்ததால் அவரின் ஆணுறுப்பில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிபேட்டை மாவட்டம், புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும்  இரு மகள்களும் உள்ளனர்.  இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், அவரது மனைவிக்கு கணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வேலை செய்யும் இடத்தில் பெண்ணுடம் அவருக்கு பழக்கம் இருப்பதாக அவர் சந்தேகதித்துள்ளார். இந்நிலையில்,  அவர் வேறொருவருடன் வீடியோகாலில் பேசியதை கண்டு ஆத்திரமடைந்த அவர் கணவனை பழிவாங்க முயற்சித்துள்ளார். இதனை அடுத்து, தங்கராஜ் தூங்கி கொண்டிருந்த போது அவர் கொதிக்கும் வெந்நீரை அவரது ஆணுறுப்பில் ஊற்றியுள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife attack hotwater in her husband


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->