ஒன்றிணைந்த அமிதாப் பச்சன்-சூர்யா- அக்‌ஷய் குமார்..! எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், சூர்யா ஆகியோர் இந்தியன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் லீக் தொடரின் விளம்பரத்திற்கான சந்திப்பில் பங்கேற்றனர். 

சென்னை அணியின் உரிமையாளரான நடிகர் சூர்யா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த தொடரை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

டி10 வடிவில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் நடத்தப்பட உள்ளது. இந்த தொடர் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 

இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் போன்ற 6 அணைகள் கலந்து கொள்ள உள்ளன. 

அமிதாப்பச்சன் மும்பை அணி உரிமத்தையும், ராம்சரண் ஹைதராபாத் அணி உரிமத்தையும், ரித்திக் ரோஷன் பெங்களூரு அணியின் உரிமத்தையும், அக்ஷய் குமார் ஜம்மு காஷ்மீர் அணியின் உரிமத்தையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitabh Bachchan Suriya Akshay Kumar together


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->