பிக் பாஸ் வீட்டில் பிக் பாஸ் போட்டியாளரை கைது செய்த போலீசார்! காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


கன்னட பிக் பாஸ் போட்டியாளரான வரதூர் சந்தோஷை கர்நாடக காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் கன்னடத்திலும் பிக் பாஸ் சீசன் 10 ஒளிபரப்பாகி வருகிறது. 

கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த 22 ஆம் தேதி எபிசோடில் வரதூர் சந்தோஷ் புலிநகம் கொண்ட சங்கிலியை அணிந்திருந்தார். 

இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், போட்டியாளர் வரதூர் சந்தோஷை கர்நாடக காவல் துறையினர் பிக் பாஸ் வீட்டிலே வைத்து கைது செய்தனர். 

இதனை தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டுள்ளார். புலிநகம் மற்றும் புலிப்பல் வாங்குவதும், விற்பதும் போன்றவை சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss contestant arrested in Bigg Boss house


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->