அம்மா சாகும் போது கூட நான் இல்ல - பெட்டியில் மனமுறுகிய பிரபல நடிகை.!
cook withu komali contestant pavithra press meet
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் புகழ்பெற்றவர் பவித்ரா. இவர் பெரிய திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சினிமா பக்கம் நகர்ந்து சதீஷூடன் ‘நாய் சேகர்’ படத்தில் நடித்தார்.
அடுத்தடுத்து, படம், இசை ஆல்பம் என்று திரையுலகில் பிஸியாக நடித்து வரக்கூடிய இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், அவர் பேசியிருப்பதாவது, “கடந்த ஆண்டு மே மாதம் என் அம்மா திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார்.
அப்போது நான் காசியில் இருந்தேன். அந்த கடைசி நேரத்தில் கூட நான் அம்மாவுடன் இல்லை. அம்மாவை கோயம்புத்தூர் கொண்டு செல்வதற்கு எனது நண்பர்கள் தான் அந்த சமயத்தில் உதவி செய்தார்கள். அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அம்மா போன பிறகு, இப்போது எனக்கு யாருமே இல்லாதது போலதான் உணர்கிறேன். இப்போது எனக்காகத்தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். என் அம்மாவுக்கு நான் நடிப்பதை விட கவிதை, பாடல் எழுதுவது ரொம்ப பிடிக்கும். இதனாலேயே பாடல் மீது எனக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. அம்மாவுக்காகவும் சின்ன சின்ன கவிதைகள் எழுதி இருக்கிறேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
English Summary
cook withu komali contestant pavithra press meet