கன்னட திரைப்பட நடிகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது! - Seithipunal
Seithipunal


கடந்த 2011-ம் ஆண்டு, கன்னட திரையுலகில் 'சுயம் கிருஷி' என்ற படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர்​ வீரேந்திர பாபு. 

இவர், மயக்க நிலையில் இருந்த ஒரு பெண்ணை 2 வருடங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்து. 

பின்னர் அந்த வீடியோவை பதிவு செய்து, சமூகவலைதளங்களில் பகிர்ந்து விடுவதாக தெரிவித்து, 15 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். 

இதனால் அந்தப் பெண் அச்சமடைந்து, தனது நகைகளை விற்று பணம் கொடுத்துள்ளார். இதற்கிடையே, வீரேந்திர பாபு கடந்த ஜூலை 30-ம் தேதி மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். 

பின்னர் அந்தப் பெண்ணை வரவழைத்து காரில் ஏற்றி சென்று துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, அவரிடம் இருந்த நகைகளை பறித்துள்ளார். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், பெங்களூரு கொடிகேஹள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீரேந்திர பாபு மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kannada film actor arrested in sexual assault case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->