பாலியல் புகார் எதிரொலி! நடிகர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு ராஜினாமா! - Seithipunal
Seithipunal


மலையாள திரையுலகில் நடிகர்கள், இயக்குநர்கள் மீதான பாலியல் புகார் எழுந்து வரும் நிலையில், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் குறித்து நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை தற்போது வெளியில் சொல்ல தொடங்கியுள்ளனர்.

இயக்குனர் ரஞ்சித், நடிகர் சித்திக் உள்ளிட்ட 8 பேர் மீது தற்போதுவரை பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்த புகார்கள் குறித்து மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவரான மோகன்லால் உள்ளிட்ட 17 நிர்வாகிகளும் இன்று ராஜினாமா செய்துள்ளனர். 

இதுகுறித்து வெளியான அறிக்கையில், எங்கள் மேல் உள்ள பிழையை சுட்டி காட்டியதற்கு அனைவருக்கும் நன்றி. சங்கத்து உறுப்பினர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் அனைவரும் ராஜினாமா செய்கிறோம். 

சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தார்மீக அடிப்படையில் செயற்குழுவை கலைக்க தீர்மானம் செய்துள்ளோம். புது செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் 2 மாதங்களில் உருவாக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Actress Abuse Allegation Actors Association 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->