புதிய சிக்கலில் சாய்பல்லவி படம் - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து புதிய படம் ஒன்று தயாராகிறது. இந்தப் படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக கன்னட நடிகர் யாஷ், அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் ராமாயணம் படம் மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில், காப்புரிமை பிரச்சினையால் இந்தப் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராமாயணம் படத்துக்கான காப்புரிமை தங்களிடம் இருப்பதாகவும் அதை மீறி யாரும் படத்தை எடுக்க கூடாது என்றும் தயாரிப்பாளர் மது மண்டேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ராமாயணம் படக்குழுவினருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளார். இதனால், ராமாயணம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இது திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new problam in ramayanam movie


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->