விஜய் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தவர்! ஆனால் குழந்தைகளுக்கு ஒட்டு இல்லை! விஜய் எம்.ஜி.ஆர் இல்லை! இருந்தாலும் விஜய்க்கு ஆதரவு! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தொடர்ந்து எதிர்ப்பு வரும்நிலையில், இது தொடர்பாக திருப்பாச்சி நடிகர் பெஞ்சமின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், திருப்பாச்சி படத்தின் மூலம் என் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி, என்னை சினிமாவில் வாழ வைத்த தெய்வம் விஜய்சார் என்று தெரிவித்தார். மேலும், ஒருவர் புதிதாக கட்சி தொடங்கினால் அதற்கு எதிர்ப்பு வரதான் செய்யும் என்றும், அதையெல்லாம் தாண்டி வருபவர்கள்தான் வெல்கிறார்கள்.

தமிழ் நாட்டில்தான் இந்த மாதிரி நடக்கிறது. மற்ற எங்கும் இப்படி கிடையாது. கண்டிப்பாக விஜய் சார் வெல்வார் என்று குரியனார். தொடர்ந்து பேசிய அவர், விஜயுடன் சுமார் 190 நாட்கள் பணியாற்றி உள்ளதாக தெரிவித்த அவர், விஜய் மனதில் ஒன்று நினைத்துவிட்டார் என்றால் அதிலிருந்து பின்வாங்கமாட்டார்.

சிறு வயது குழந்தைகளின் மனதில் இடம் பிடிப்பவர்கள்தான் அரசியலில் வெல்வார்கள். எம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு விஜய்தான் சிறு வயது குழந்தைகளின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். நிச்சயம் அரசியலில் வெல்வார். இதை நான் அவருடன் நடித்ததால் சொல்லவில்லை என்றும், ஒரு பொதுமக்களாக சொல்கிறேன் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Only those who hold a place in childrens minds will win in politics Tirupachi actor who expressed support for Vijay


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->