சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் அடுத்த பாகத்தின் படப்பூஜை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சந்தானம். தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. 

தி ஷோ பீப்பிள் நிறுவனம் சார்பில் ஆர்யா, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், மற்றும் ஹேன்ட்மேட் பிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப் படத்தை எஸ். பிரேம் ஆனந்த், இப்படத்தை இயக்குகிறார். படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், "கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து செய்து சமீபத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்.

மிக அதிக பொருட்செலவில் உருவாக உள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் அடுத்த பாகத்திற்கான பூஜை திரை உலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் இன்று நடந்த நிலையில் படபிடிப்பு விரைவில் தொடர்ந்து நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today dd returns next part pooja


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->