இந்த காட்சியில் நடித்ததால் என் பெற்றோர் வருந்தினார்கள்- அனிமல் பட நடிகை பேட்டி! - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரை உலகின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த 1 ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த திரைப்படம் இதுவரை ரூ. 700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை த்ருப்தி டிம்ரி, 'ரன்பீர் கபூருடன் வரும் நெருக்கமான காட்சிகளில் என் பெற்றோர் சற்று மன வருத்தம் அடைந்தார்கள். 

அதிலிருந்து வெளியே வருவதற்கு நேரம் எடுத்துக் கொண்டார்கள். இதை நீ செய்ய வேண்டாம் இருந்தாலும் சரி என தெரிவித்தார்கள். 

பின்னர் நான் அவர்களிடம், நான் எந்த தவறும் செய்யவில்லை ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்திற்கு 100% உண்மையாக இருக்க வேண்டும். 

அதையே நான் செய்தேன் என தெரிவித்து புரிய வைத்தேன்' என்றார். அனிமல் திரைப்படத்தில் இவர் ஜோயார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Triptii dimri interview goes viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->