இன்றே கடைசி நாள் - டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. 

அந்த வகையில், 2024-ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு நடத்துகிறது.

இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி வௌியிட்டது. அதாவது, குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுவரைக்கும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கான, காலஅவகாசம் நிறைவடைந்த பிறகு, விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today last date of apply group 2 and 2a exams


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->