பெண்ணுக்கு பாலியல் தொல்லை..போக்சோ வழக்கில் போலீஸ்காரர் கைது!  - Seithipunal
Seithipunal


பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.மேலும் ஒரு போலீஸ்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 42 வயதான சைலேஷ் என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.இவர் சில மாதங்களுக்கு முன்பாக தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அப்போது அவருடன் சேர்ந்து அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி  வந்த சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி கிராமத்தை சேர்ந்த செந்தில்  போலீஸ்காரரும் சைலேசுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு பாலி யல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், சிவகிரி போலீசில் புகார் அளித்தார். அப்போது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இதையடுத்து  அந்த பெண்ணின் கொடுத்த புகாரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின்பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்தார்.

இதையடுத்து 2 போலீஸ்காரர்கள் மீதும் போக்சோ வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்தநிலையில்  தொடர்ந்து புகாருக்கு உள்ளான 2 பேரையும் கைது செய்ய அவர் உத்தரவிட்டார்.

இதனிடையே தற்போது ஆலங்குளம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சைலேசுக்கும், சிவகிரியில் பணியாற்றி வரும் செந்திலுக்கும் இந்த தகவல் தெரியவந்ததையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகிவிட்டனர்.

அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று நாகர்கோவிலில் பதுங்கியிருந்த சைலேசை கைது செய்தனர்.

கைதான சைலேசை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள செந்திலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் 'சஸ்பெண்டு' செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.இந்தநிலையில் தன் மீது பொய் வழக்கு போட்டு உயர் அதிகாரிகள் தன்னை சிறையில் அடைக்க முயற்சி செய்வதாக சைலேஷ் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sexual harassment of a woman Cop arrested in POCSO case 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->