அணியின் வெற்றிக்காக சதம் அடித்தே ஆக வேண்டும் என போராடுபவர் விராட் கோலி! - எம்.எஸ் தோனி
Virat Kohli is the one who fights for the teams victory by scoring a century MS Dhoni
கடந்த 22ம் தேதி IPL 2025 18th சீசன், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக விளையாடிய ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி, 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்நிலையில், விராட் கோலி குறித்து எம்.எஸ்.தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,"விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
50-60 ரன்கள் அவருக்கு போதாது.எப்போதும் சதம் அடிக்க வேண்டும்.
அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார்.இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார்" என்று விராட் கோலியை புகழ்ந்தார்.
English Summary
Virat Kohli is the one who fights for the teams victory by scoring a century MS Dhoni