வெப்பத்தின் பிடியில் தலைநகரம், 1100 மரங்கள் வெட்டப்பட்டதால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம் !! - Seithipunal
Seithipunal


கோடையின் காரணமாக தலைநகர் டெல்லியின் வெப்பநிலை உச்சத்தை தொட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்பத்தால் மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள், மேலும், டெல்லி மேம்பாட்டு ஆணையம் தலைநகரின் ரிட்ஜ் பகுதியில் கண்மூடித்தனமாக மரங்களை வெட்டுவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 

இந்த சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இது போன்ற வெட்கக்கேடான செயல்களை புறக்கணிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளை செய்யவில்லை என்றால், இப்போது நீதிமன்றம் உத்தரவிடும் என தெரிவித்தது. டெல்லி லெப்டினன்ட் கவர்னர் மரங்களை வெட்ட டெல்லி மேம்பாட்டு ஆணையதிற்கு உத்தரவிட்டாரா என நீதிமன்றம் வினா எழுப்பியது.

 1100 விலைமதிப்பற்ற மரங்கள் வெட்டப்பட்டு, தேசிய தலைநகரில் சுற்றுச்சூழலை மோசமடைய வைத்தனர், அதேசமயம் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த மரத்தையும் வெட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தங்களின் சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு கடமைகளை செய்ய முடியாவிட்டால், நீதிமன்றம் உத்தரவுகளை வழங்க வேண்டும். இவ்வாறு சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் நீதிபதி தெரிவித்தனர்.

டில்லியில் உள்ள ரிட்ஜ் பகுதியில் மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மரங்கள் எப்படி வெட்டப்பட்டன என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் விடுமுறைக்கால பெஞ்ச் கேள்வி எழுப்பியது. மேலும் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா, மரங்களை வெட்டுமாறு டெல்லி மேம்பாட்டு ஆணையம்அதிகாரிகளை கேட்டுக் கொண்டாரா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

லெப்டினன்ட் கவர்னர் வருகைக்கு பிறகு மரங்கள் வெட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கை தானாக முன்வைத்த நீதிமன்றம், பல உயிர்களைக் கொன்று குவித்த கடுமையான வெப்பத்தின் பிடியில் டெல்லி தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தேசிய தலைநகரில் ஒரு பெரிய மரம் நடும் இயக்கத்தை முன்மொழிந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1100 trees were cut down in capital delhi


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->