வேளாண் பட்ஜெட் 2025: கோடை உழவுக்கு ரூ.2,000 மானியம்! தமிழகத்தின் 29 மாவட்டங்களுக்கு சிறப்புத் தொகுப்பு!
TN budget Agriculture Budget
வேளாண் வளர்ச்சிக்கு புதிய சிறப்புத் திட்டங்கள் – 2025-26 பட்ஜெட் அறிவிப்புகள்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை தவிர 29 மாவட்டங்களில் நெல் சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
✅ நெல் சாகுபடி ஊக்குவிப்பு
- மானாவரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும்.
- காவிரி படுகை மாவட்டங்களில் குறுவை சாகுபடியை அதிகரிக்க தனி திட்டம் செயல்படுத்தப்படும்.
✅ விவசாயிகள் நலத்திட்டங்கள்
- 30 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
- நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு மற்றும் இறுதிச் சடங்கு செலவுத் தொகை அதிகரிப்பு.
- மலைப்பகுதி விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தனி நிதி ஒதுக்கீடு.
✅ பொருளாதார ஆதரவு திட்டங்கள்
- உழவர் நல மையங்கள் வழியாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கு ரூ.3.58 லட்சம் கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது.
✅ நெல் கொள்முதல் & தோட்டக்கலை பயிர்கள்
- 2023-24ஆம் ஆண்டில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- 16.3 லட்சம் ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
English Summary
TN budget Agriculture Budget