11 ஆம் வகுப்பு மாணவியை உயிருடன் எரித்த காதலன் - ஆந்திராவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே விக்னேஷிற்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் மாணவி தனது காதலை விட்டுள்ளார்.

வேறு பெண்ணை திருமணம் செய்த பிறகும் கூட தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், மாணவியை தனிமையில் சந்திக்க வேண்டும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், அந்த மாணவி விக்னேஷை தனிமையில் சந்தித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த விக்னேஷ் மாணவியை தாக்கி அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், மாணவி அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் அவர்கள் மாணவியை பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th class student murder in andira


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->