தலைமை ஆசிரியரைச் சுட்டுக் கொன்ற 12-ம் வகுப்பு மாணவர் - பள்ளியில் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த எஸ்.கே.சக்சேனா என்பவர் இன்று மதியம் 1.30 மணியளவில் பள்ளியின் கழிவறை அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் எஸ்.கே.சக்சேனா. இவரை, அதே பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இதைப்பார்த்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து ஆசிரியரின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், இந்தக் கொலையை செய்த மாணவர் மற்றும் அதற்கு துணையாக இருந்த மற்றொரு மாணவனும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இரண்டு மாணவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளியில் மாணவர் ஒருவர் தலைமை ஆசிரியரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 class student gun shoot to head master in madhya pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->