பஞ்சாப் - பாகிஸ்தான் எல்லையில் 13 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தார்ன் தரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், நேற்று மதியம் 12.40 மணியளவில் அங்குள்ள வயல்வெளி பகுதியில் 6 பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13.160 கிலோ போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். 

இதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் காவல்துறையினருடன், எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் கண்டெடுக்கப்பட்டது. 

இந்த டிரோன் போதைப்பொருளை கடத்த பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 kilo drugs seized in punjab pakisthan border


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->