கொடூரம்! துப்பாக்கி முனையில் 16 வயசு சிறுமி பலாத்காரம்! பக்கத்துவீட்டுக்காரரின் கொடூர செயல்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில்  துப்பாக்கி முனையில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஐந்தாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியான துவாரகா நகரில் உள்ள குடியிருப்பில் கடந்த திங்கள்கிழமை பெற்றோர்கள் வெளியில் செல்லவே 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை நன்கு அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் சிறுமியை துப்பாக்கியை காட்டி மிரட்டி  வலு கட்டாயமாக அருகில் இருந்த கட்டடத்துக்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்காரம் செய்துவிட்டு சிறுமியை ஐந்தாவது மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில்  சிறுமிக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறுமியின்அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பகுதியினர் சிறுமியின் மீது ஆம்புலன்ஸ் உதவி உடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அங்க வந்த காவல்துறை பெண்ணின் வாக்குமூலத்தை பெற்று வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற நபரை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 year old girl was raped at gunpoint in Delhi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->