ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் முறியடிக்கப்பட்டு இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சீர்குலைக்கும் விதத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவி நாச வேளையில் ஈடுபட்டு வருவதை இந்திய பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் ராஜாரி மாவட்டம் லாம் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. 

அவர்களை தடுத்த நிறுத்த முயன்ற போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் துப்பாக்கி சூடு நடத்தியது.

இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஏ.கே 47 உள்ளிட்ட இரண்டு ஆயுதங்களை பயங்கரவாதிகளிடமிருந்து இந்திய பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். 

இன்று காலை முதலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 terrorists shot dead in Jammu and Kashmir


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->