பீகாரில் இடி மின்னல் தாக்கி 20 பேர் பலி.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பீகாரில் இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து இடி மற்றும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 மேலும் கைமூர், போஜ்பூர், பாட்னா, ஜெகனாபாத், அர்வால், ரோஹ்தாஸ், சிவன் மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களிலும் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 people died in Bihar due to lightning strike


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->