மக்களே உஷார் ! கம்பியில் துண்டு காய வைத்தபோது மின்சாரம் தாக்கி அப்பா,அம்மா,மகன் 3 பேர் பலி!
3 people died due to electric shock
புனேவில் குளித்துவிட்டு இரும்பு கம்பியில் துண்டு காய வைத்த போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனேவில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. புனேவின் பல்வேறு பகுதிகளில் கனமழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குளித்துவிட்டு இரும்பு கம்பிலான கயிற்றில் துண்டு காய வைக்கும் போது மின்சாரம் தாக்கியதில் சுசீந்திரன் பலேக்கர், அவரைக் காப்பாற்ற வந்த அவரின் மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரவு பெய்த கனமழையால் அண்டை வீட்டு மின்சார ஒயர் அறுந்து, பலேக்கர் வீட்டின் தகர கூரையின் மேல் விழுந்து மின்சாரம் பாய்ந்தது தெரியாமல் இருந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இரும்பு கம்பியில் துண்டு காய வைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
3 people died due to electric shock