பைக் மீது டிரக் மோதி 3 பேர் பலி - உ.பியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பகுதியின் நவ்கர் அருகே ஜகதீஷ்பூர்-மோஹங்கஞ்ச் சாலையில் வேகமாக வந்த டிரக் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம்குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் மூன்று பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரக்கை பறிமுதல் செய்து, தலைமறைவான டிரக் ஓட்டுனரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 peoples died for accident in up


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->