தெற்கு சூடான் விமான விபத்து; இந்தியர் உட்பட்ட 20 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


தெற்கு சூடானில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட்டில் அட்ராஜிக் என்ற சிறிய விமானம் எண்ணெய் வயல் விமான நிலையத்திலிருந்து ஜூபாவுக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம், திடீரென கோளாறு ஏற்பட்டு விழுந்து நொறுங்கியுள்ளது.

குறித்த விபத்தில் பயணித்தோர் பெரும்பாலானோர், கிரேட்டர் பயனீர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த எண்ணெய் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விமான விவாதத்தில் பலியானவர்களில் சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்து குறித்து யூனிட்டி மாநில தகவல் துறை அமைச்சர் கேட்வேச் பிபால் கூறியதாவ து:சிறிய ரக விமான விபத்தில் பலியானவர்களில் 2 பேர் சீனாவை சேர்ந்தவர்கள்; ஒரு இந்தியரும் இருந்துள்ளார். இந்த சம்பவம் இப்பகுதியில் விமானப் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்புகிறது.

தெற்கு சூடான் சமீபத்திய ஆண்டுகளில் பல கொடிய விமான விபத்துக்களைக் கண்டுள்ளது. இது விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் இருக்கும் குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது என்று  கேட்வேச் பிபால் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 people including an Indian killed in South Sudan plane crash


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->