கொடூரத்தின் உச்சம்..இந்துக்கள் கடும் கண்டனம்! பசுவின் தலையை வெட்டி இந்து கோவிலில் வீசிய 4 பேர் கைது!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் பசுவின் தலையை வெட்டி இந்து கோவிலுக்குள் வீசிய நான்கு பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசுவின் தலை கோவிலில் வீசியதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறன்றது.

மத்திய பிரதேசம் மாநிலம் இரட்டிலம் மாவட்டம் உள்ள  இந்து கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு தினதோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று கோவிலின் பூசாரி அதிகாலை வேளையில் கோவில் வளாகத்த்தில் உள்ள நுழைவு வாயிலை திறந்துள்ளார்.

அப்போது ரத்தம் சொட்ட சொட்ட துண்டிக்கப்பட்ட பசுவின் தலை ஒன்று கோவில் வாசலில் கிடந்தை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி உடனடியாக இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைந்து வந்து கோவிலில் வளாகத்தில் கிடந்த பசுவின் தலையை அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் பசுவின் தலையில் கோவிலுக்குள் வீசி சென்றது தெரியவந்தது.

இதன் பேரில், பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்த காரணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 arrested for cutting cow head and throwing it in Hindu temple


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->