ஐதராபாத்தில் பரிதாபம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


ஐதராபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் குஷிகுடா பகுதியில் வசித்து வந்தார் சதீஷ். இவரது மனைவி வேதா. இவர்களது குழந்தைகள் நிஷிகேத் (வயது 9), நிஹல் (5). இந்நிலையில் சதீஷ் குடும்பத்தாருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சதீஷின் இரண்டு மகன்களும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். இதையடுத்து இரண்டு மகன்களுக்கு சிகிச்சை அளித்தும் குணமாவதால் சதீஷ் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 members of the same family committed suicide in Hyderabad


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->