கொச்சி விமான நிலையம்: கடத்திவரப்பட்ட ரூ.85 லட்சம் தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


கொச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூபாய் 85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது குவைத்தில் இருந்து கொச்சி வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், ஒட்டும் டேப்பை பயன்படுத்தி காலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த 1.978 கிலோ எடை கொண்ட ரூபாய் 85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மலபுரத்தை சேர்ந்த அப்துல் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் தங்கம் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

85 lakhs worth gold seized in kochi airport


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->