கொடூரம்! மது போதையில் கார் ஒட்டிய சிறுவன்! கர்ப்பிணி மீது மோதி சிசு வயிற்றுக்குள்ளே பலி! - Seithipunal
Seithipunal


குடிபோதையில் சிறுவன் ஓட்டி வந்த கார் கர்ப்பிணி பெண் மீது மோதியத்தில் கருவில் இருந்து 9 மாத சிசு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா 9 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. ரவி தனது மனைவி மற்றும் 6 வயதுக்கு குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது மது போதையில் காரை ஓட்டி வந்த சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளது.

அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் விபத்தை கண்டு  இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு சென்ற மூவரும் படுகாயம் அடைந்த தீபிகாவை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இந்த நிலையில் விபத்தில் காயம் அடைந்த தீபிகா வயிற்றில் இருந்த குழந்தை வயிற்றுக்குள்ளே இறந்ததாக கூறப்படுகிறது. 

ரவி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஆறு வயது குழந்தை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 month old baby was killed when a car driven by a drunk boy rammed into a pregnant woman


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->