மக்கள் வெள்ளத்தால் மூழ்கிய அயோத்தி ராமர் கோவில்: கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம்! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற முடிந்தது. 

அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ஸ்ரீ பால ராமரை காண அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயமடைந்துள்ளனர். 

உத்திரபிரதேசம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவடைந்த நிலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ராமர் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோவிலுக்குள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நுழைந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி பக்தர்கள் காயமடைந்ததை தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ayodhya Ram temple Devotees injured crowd


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->