மருத்துவத்திற்காக இந்தியாவிற்கு வந்த வங்கதேசத்தினர்.! திருப்பி அனுப்பிய பாதுகாப்பு படையினர்.! - Seithipunal
Seithipunal


வங்க தேச மாநிலத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது எல்லை பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தெரிவித்ததாவது,

"தன்னுடைய அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக, இந்தியாவில் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும் என்பதால் இங்கு வந்தோம்" என்று தெரிவித்தார். அதன்பின்னர் போலீசாரின் தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்பு, வங்கதேச எல்லை காவல்படையினரிடம் நேற்று காலை 8.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டனர் என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்தியா - வங்கதேச எல்லையை கண்காணிக்கும் பணியில், எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதும், அத்துமீறி நுழையும் வங்கதேசத்தினரை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி வருவதும் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangladesh family come to india for medical treatment


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->