லஞ்சம் வாங்கியதாக புகார் - அரசு ஊழியர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தின் மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சீனிவாச ராவ். இவர் தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதன் பின்னர் மாசுகட்டுப்பாடு அதிகாரி சீனிவாச ராவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கை புதுச்சேரி லிங்கா ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தேவையான அனுமதி வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர் ஒருவர், கோவையைச் சேர்ந்த ஒருவர், புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்று மொத்தம் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case file on government officer in puthuchery for bribe


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->