மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் - இன்று விவாதம்! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகளின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று நடைபெறுகிறது. 

கடந்த மாதம் 20ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கமளிக்க கோரி முதல் நாளில் இருந்தேன் 'INDIA' கூட்டணி கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது. 

மணிப்பூர் விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு விரிவாக விவாதிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. 

பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. 

அந்த தீர்மானத்தின் விவாதம் இன்று மக்களவையில் தொடங்கி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி விவாதத்தின் இறுதி நாளன்று பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து மக்களவையில் விவாதத்தை எதிர்க்கட்சிகளின் சார்பில் முதல் பேச்சாளராக ராகுல் காந்தி பங்கேற்கிறார். 

இன்று பகல் 12 மணிக்கு மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் கேள்வி நேரத்திற்கு பின் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central government no confidence motion


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->