பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்ற தம்பதியினர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, ஜல்னா மாவட்டம் அசர்கேடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 12-ந்தேதி பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில், குழந்தையைக் கொன்று கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வக்ரி வாட்காவ் தண்டா கிராமத்தில் சதீர்பவார்-பூஜா பவார் தம்பதியின் பெண் குழந்தை சமீபத்தில் காணாமல் போனதை போலீசார் கண்டறிந்தனர். 

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த தம்பதி தாங்கள் பெற்ற குழந்தையை கொன்று கிணற்றில் வீசியதும், ஏற்கனவே தங்களுக்கு ஒரு மகள் இருப்பதால், மற்றொரு பெண் குழந்தையை வளர்க்க விருப்பமின்றி இந்த செயலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். அதன் படி போலீசார் அந்த தம்பதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

couples arrested for kill girl baby in maharastra


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->