கொச்சி விமான நிலையம்.! ரூ.58 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்...! - Seithipunal
Seithipunal


வளைகுடா நாட்டில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 58 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திவரப்படுவதை தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வளைகுடா நாடான மஸ்கட்டில் இருந்து கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படைகள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கேப்ஸ்யூல் வடிவில் உடலுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூபாய் 58 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 182 கிராம்பு எடை கொண்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த தங்கம் கடத்தால் தொடர்பாக அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Customs department seizes gold worth Rs 58 lakh at Kochi airport


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->