அடேங்கப்பா..! ரூ.2400 கோடி! தலைநகரை அதிரவைத்த குடோன்! பார்க்க உப்பு மாதிரியே இருக்கும் போதைபொருள்!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

அதேபோல மாநில அரசுகளும் போதைப் பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகளை அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் சுமார் 2400 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொகைன் போதை பொருள் பறிமுதல் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், டெல்லி ரமேஷ் நகர் பகுதியில் ஒரு கிடங்கில் 200 கிலோ எடை உள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொகைன் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரிட்டன் நாட்டை சேர்ந்தவருக்கு இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்ற தகவல் வந்துள்ளது. மேலும் அந்த நபர் லண்டனுக்கு தப்பி செல்ல இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi drug cocaine


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->