நாளை தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் செயல்படும்!...அரசு அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


விஜயதசமி தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நாளை மாணவர் சேர்க்கைக்காக  அரசு பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் நாளை விஜயதசமி தினம் கொண்டாடப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்க விஜயதசமி நாளான்று பொற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பர். அதன்படி  ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகள் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும். இதில், 3 வயது கடந்த குழந்தைகளை பிரி.கேஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆகிய முதல்கட்ட வகுப்புகளில் பெற்றோர்கள் சேர்ப்பர்.

இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் சமீப காலமாக அரசு பள்ளிகளில் விஜயதசமி தினத்தில் சிறப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த வருடமும்  மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர் விடுமுறை மற்றும் நாளை சனிக்கிழமை என்ற போதிலும், விஜயதசமியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் பொருட்டு அரசு தொடக்கப் பள்ளிகள் திறந்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government schools will be functioning all over tamil nadu tomorrow government action announcement


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->