பொள்ளாச்சியில் சோகம் : படிக்க சொல்லி திட்டியதால் எட்டாம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அன்சாரி வீதியை சேர்ந்தவர் சரவணபாபு-விஜயலட்சுமி தயம்பதியினர். இவர்களது மகன் தருண். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

தற்போது, தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறுவதால் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகளில் மதியத்திற்கு பிறகு பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த நிலையில் நேற்று தேர்வு நடைபெற்றதால் வீட்டில் இருந்த தருண் படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டிருந்துள்ளார்.

இதைப்பார்த்த அவரது  தாயார் விஜயலட்சுமி தருணை திட்டி விட்டு டி.வி. ரிமோட்டை பிடுங்கி வைத்துள்ளார். அதன் பின்னர் அவர் வெளியில் சென்றுள்ளார்.  இதனால், வீட்டின் அருகில் வசிக்கும் தருண் பாட்டி பேரன் பள்ளிக்கு சென்று விட்டானா? என்று பார்ப்பதற்காக வந்துள்ளார். 

அப்போது அவர் கதவை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால், தருண் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து அந்த பாட்டி அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது தருண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகத் தொங்கியதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதை தொடர்ந்து அவர்கள் அந்த சிறுவனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

eight class student sucide in pollachi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->