காவிரியில் உபரி நீர் திறப்பு 14,500 கன அடியாக உயர்வு!...விவசாயிகள் மகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 14,500 கன அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 14,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,000 கன அடியும், கபினி அணையில் இருந்து 4,500 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஒகேனக்கல் அருவி மற்றும்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயரக்கூடும். அதுமட்டுமல்லாமல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளை நம்பி வாழும் விவசாயிகளின் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து  கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தால், மேலும் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்யப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Excess water release in Cauvery increased to 14500 cubic feet Farmers are happy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->