பரபரப்பு! ஓடிக்கொண்டிருந்த விரைவு ரயில்! என்ஜினிலிருந்து பிரிந்து சென்ற பெட்டிகள்! - Seithipunal
Seithipunal


எர்ணாகுளம்- டாடா நகர் விரைவு ரயில் கேரளா மாநிலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது என்ஜினிலிருந்து பெட்டிகள் தனியாக பிரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினந்தோறும் எர்ணாகுளம் முதல் டாடா நகர் வரை செல்லும் விரைவு தொடர்வண்டி இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

இந்தநிலையில், இன்று எர்ணாகுளம்  - டாடா நகர் விரைவு ரயில் இன்று காலை கேரளா மாநிலம் வழியாக விடையாக சென்று கொண்டு இருந்தது. திடீர் என்று பலத்த சத்தத்துடன் இஞ்சினிருந்து பெட்டிகள் தனியாக பிரிந்ததாக கூறப்படுகிறது.

பலத்த சத்ததைக்கேட்டு ரயில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  என்ஜினிலிருந்து பெட்டிகள் தனியாக பிரிந்தை அறிந்த பயணிகள் அனைவரும் பயந்து காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசு துறையினர் இலவச எண்ணிற்கு அழைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் என்ஜினிலிருந்து மூன்றாவது பெட்டி விலகியதாக தகவல் வெளியானதை அடுத்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் பிரிந்து நின்று பெட்டிகளை சரி செய்து என்ஜினுடன் இணைத்த பின்னர் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

சம்பவம் நடந்தபோது ரயில் மெதுவாக இயங்கியதாக பயணிகள் யாருக்கும் எந்த காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ஓடிக்கொண்டிருந்த விரைவு ரயிலில் இன்ஜினியிலிருந்து பெட்டிகள் தனியாக பிரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fast train was running separated from train Engine


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->