பரீட்சைக்கு வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம்.. மூத்த மருத்துவருக்கு போலீஸ் வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசத்தில் இறுதியாண்டு பயின்று வந்த எம்பிபிஎஸ் மாணவி ஒருவர் மூத்த மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைமறைவான டாக்டர் சஞ்சய் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். 

மத்தியப் பிரதேசம்  டாடியாவைச் சேர்ந்த 25 வயது இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவி துணைத் தேர்வுக்கு பின் கல்லூரியில் அவரது மூத்த மருத்துவர் சஞ்சய் குமார் இவானைச் சந்தித்தார்.

அப்போது மாணவியை எதோ வேலை என கூறி ஆண்கள் விடுதியில் உள்ள தனது அறைக்கு சஞ்சய் அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர் அவர்கள் அறையை அடைந்ததும், ஏதும் அறியாத அந்த மாணவி அவருடைய அறைக்கு சென்றுள்ளார் .அப்போது சஞ்சய் கதவை மூடிவிட்டு, மாணவியை தள்ளிவிட்டு வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அடுத்த நாள் பாதிக்கப்பட்ட பெண் கம்பூ காவல் நிலையத்திற்குச் சென்று அவர் மீது புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  தலைமறைவான டாக்டர் சஞ்சய் குமாரை தேடி வருகின்றனர். 

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த அம்மாணவியை விடுதியில் வைத்து மூத்த மருத்துவர் சஞ்சய் குமார் இவானே வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் ,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Female trainee doctor raped on exam Senior doctor arrested by police


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->