காகித தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
fire accident at paper factory in gujarat
குஜராத் மாநிலத்தில் உள்ள வர்சோலா பகுதியில் காகித தொழிற்சாலையில் ஒன்று இயங்கி வந்தது. இந்த காகித தொழிசாலையில் டன் கணக்கில் தாகித பண்டல்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் திடீரென இந்தக் காகித தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து காகித பண்டல்கள், உற்பத்தி உபகரணங்கள் மளமளவென எரியத் தொடங்கின. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வருகின்றனர். இதற்கிடையே இந்த பயங்கர தீ விபத்தில் காகித பண்டல்கள் மற்றும் உற்பபத்தி உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். காகித தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fire accident at paper factory in gujarat